இருதரப்பு மோதலில் கணவன் பலி; மனைவி படுகாயம்!
இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கணவன் உயிரிழந்த நிலையில் சம்பவத்தில் மனைவி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் குருநாகல், பிங்கிரிய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் கைது
பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகொல்லாகம பிரதேசத்தில் நபர் ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 52 வயதுடைய வல்லவ, நாகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 41 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.