கடும் பசி: உணவுக்காக சிறுநீரகத்தை விற்கும் அவல நிலையில் மக்கள்!
ஆப்கானிஸ்தானை கடந்த 2021-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.
இதேவேளை, அந்நாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்தையும் இழந்து தவித்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான சொத்துக்களைப் பயன்படுத்த அனுமதிக்காத நிலையில், கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உணவுப் பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டில் சுமார் 2.2 கோடி மக்கள் தற்போது பசியில் வாடி வருவதாகப் பொருளாதார வல்லுனரான அப்துல் நசீர் ரிஷ்டியா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வேலையிழப்பு, பஞ்சம் ஆகியவற்றால் அந்நாட்டில் உள்ள கிராமங்களில், மக்கள் சிறுநீரகத்தை விற்று உணவு தேடி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும், Herat மாகாணத்தில் உள்ள வைத்தியசாலையில் கடந்த சில நாட்களில் 100-க்கும் அதிகமானோர் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு சிறுநீரகத்திற்கு இலங்கை மதிப்பில் ரூபா.189, 185 வரை வழங்கப்படுவதாகவும், (இந்திய மதிப்பில் ரூ.70,000) 5 வயது முதலான சிறுமிகளின் சிறுநீரகங்களும் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தங்களுக்கு உதவுமாறு உலக நாடுகளிடம் தலிபான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.