மனிதர்கள் ஆண்டுக்கு இவ்வளவு விலங்குகளை சாப்பிடுகிறார்களா? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
உலகளவில் ஆண்டுக்கு 7500 கோடி கோழிகள் இறைச்சிகாக வெட்டப்படுவதாக புள்ளிவிவர வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மனிதர்கள் சாப்பிடும் விலங்குகளின் எண்ணிக்கை தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரம் தலையை சுற்ற வைக்கிறது.
இதுதொடர்பாக, சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
குறித்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, உலகம் முழுவதும் மனிதர்கள் 100 பில்லியனுக்கும் அதிகமான விலங்குகளை உட்கொள்கின்றனர்.
குறித்த காணொளியில் உள்ள புள்ளிவிவரத்தில் கோழிகள் முதலிடத்தில் உள்ளன. ஆண்டுக்கு 75 பில்லியன் (7500 கோடி) அளவுக்கு கோழிகள் இறைச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன.
நாளாந்தம் எண்ணிக்கையை பார்த்தால் 205 மில்லியன் கோழிகள். இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் ஒவ்வொரு நிமிடமும் 1,40,000க்கும் மேற்பட்ட கோழிகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.
இரண்டாவது இடத்தில் மத்தி மீன்கள் உள்ளன. ஆண்டுக்கு 14 பில்லியன் அளவுக்கு இந்த மீன்களை மனிதர்கள் சாப்பிடுகின்றனர்.
Unbeliavable! Total number of animals eaten by people globally?
— Tansu Yegen (@TansuYegen) January 21, 2024
pic.twitter.com/dB1TOklZAv
அடுத்த இடங்களில் இறால் (3 பில்லியன்), வாத்து (2.9 பில்லியன்), கூஸ் வாத்து (2.1 பில்லியன்) ஆகியவை உள்ளன.
ஆண்டுக்கு 1.5 பில்லியன் பன்றிகள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. பன்றிகள் வெட்டப்படுவது 50 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.