மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ்ந்துகொண்டதால் கடும் வாகன நெரிசல்!
ஹட்டன் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ மக்கள் இன்றும் நீண்ட வரிசையில் காத்திருந்ததுடன், வாகனங்களும் அணிவகுத்து நின்றன.
இதனால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஹட்டன் நகரிலுள்ள எரிபொருள் நிலையத்திலும் டீசல் இருக்கவில்லை.
இந்நிலையில் சுமார் 4 நாட்களுக்கு பிறகு இன்றைய தினமே டீசல் விநியோகிக்கப்படுகின்றது. சுமார் 20 லீட்டர் கேன்களுடன் சாரதிகள், நீண்ட வரிசையில் காத்திருந்து டீசலை வாங்குவதை காணமுடிந்ததுடன் பாதுகாப்பு கடமையில் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை ஒரு சிலர் வரிசையில் நின்று, டீசலை வாங்கிச்சென்று, அதனை அதிக விலைக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


