கொழும்பில் வலம்வரும் கனரக இராணுவ வாகனங்கள்! மக்கள் மத்தியில் அச்சம்
கொழும்பில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பரபரப்பான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அலுவலகங்களுக்கும் கொழும்புக்கும் வந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய வீடுகளுக்கு இடைநடுவிலேயே சென்றுவிட்டனர்.
இதனால், பொதுப் போக்குவரத்தில் பகல்வேளையிலும் கடுமையான சன நெரிசல் காணப்பட்டது. இந்நிலையில், முக்கியமான இடங்களின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இராணுவ கவச வாகனங்களின் நடமாட்டங்களும் கொழும்பு வீதிகளில் அதிகரித்துள்ள நிலையில் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
அதேவேளை இலங்கையில் உச்சபட்ச இராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக
இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.