இனி இவர்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம்!
முதன்முறையாக, நாடளாவிய ரீதியில் கேட்டல் குறைபாடு உடையவர்களுக்கான இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் இன்று கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
செவிப்புலனற்றோர் மத்திய சம்மேளனம்
1998 ஆம் ஆண்டு முதல் இலங்கை செவிப்புலனற்றோர் மத்திய சம்மேளனம் விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண வழிகாட்டலின் கீழ் இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில், கடந்த 6 ஆம்திகதி சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் நடத்தப்பட்ட எழுத்துமூல பரீட்சைக்கு கம்பஹா மாவட்டத்தில் தோற்றிய கேட்டல் குறைபாடுள்ள 76 பேரில், சித்தியடைந்த 44 பேருக்கு தற்காலிக சாரதி பயிலுனர் அனுமதிப்பத்திரம் (Learner Permit) வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.