எரிபொருள் வரிசையில் வைக்கபட்டிருந்த சிலிண்டர்களை பந்தாடிய நபர்
நோர்வூட் பிரதேச சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தோ.க) உறுப்பினர் சூசை அலெக்ஸாண்டர் எரிபொருள் வரிசையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை எட்டி உதைத்து பந்தாடி விட்டு காத்திருந்த நபரை எச்சரித்துள்ளார்.
அத்துடன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த போத்தலை எடுத்து குத்துவதற்கு முயற்சித்ததுடன் ஆபாச வார்த்தைகளால் வசைபாடியுள்ளார்.
இக் காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. இந் நிலையில் அவர் மீது விசாரணை நடை பெரும் எனவும் அது வரையில் அவரை கட்சியில் இருந்து இடை நிறுத்துவதாகவும் இ.தோ காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
சூசை அலெக்சாண்டர் மீது எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் மூலம் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட ஒழுக்காற்று குழு எதிர் வரும் வியாழக்கிழமை (21) உரிய விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
இது போன்ற செயல்களுக்கு இ.தோ.கா ஒரு பொழுதும் அனுமதியளிக்காது என்பதோடு குறித்த பிரதேச சபை உறுப்பினரின் சகல கட்சி உறுப்புரிமைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை தெரிவித்து கொள்கிறேன் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.