இலங்கைக்கு இந்தியா இத்தனை ஆயிரம் கோடி உதவியுள்ளதா?...வெளியான தகவல்
கடந்த ஜனவரி மாதம் முதல் இலங்கைக்கு இந்தியா பல்வேறு வழிகளில் உதவி வருகிறது.
அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள் தொடர்ந்து விநியோகம் செய்யப்படுகிறது. தமிழ், சிங்கள புத்தாண்டின் போது 11 ஆயிரம் தொன் உணவு வழங்கப்பட்டது.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் தகவலின்படி, ஜனவரி முதல் இந்தியா ரூ.7,500 கோடி அத்தியாவசிய பொருட்கள் உதவியாகவும், ரூ.7,000 கோடி எரிபொருள் மற்றும் நாணய மாற்று உதவியாகவும், ஆசிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து ரூ.7,500 கோடி உதவியும் வழங்கியுள்ளது.
இலங்கை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர கூறியதாவது:
எரிபொருளுக்காக ஏற்கனவே பெற்ற கடனில் ரூ.750 கோடி மட்டுமே மீதம் உள்ளது. அதை வைத்து 2 முறை கப்பலில் எரிபொருள் வாங்கலாம். அதிக எரிபொருள் தேவைப்பட்டதால், 1,500 கோடி ரூபாய் கடன் வாங்கினோம்.
மேலும், இந்தியாவுடன் கூடுதல் கடனாக ரூ. 3,750 கடனுதவி கேட்டு இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.