நிறைபோதையில் நடுரோட்டில் அரச உத்தியோகஸ்தர்கள் அட்டகாசம்!
நிறைபோதையில் வீதியால் சென்ற 3 பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மருத்துவர், பொறியியலாளர் மற்றும் வங்கி அதிகாரி, வர்த்தகர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மத்தேகொட பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் வைத்தியர், தனியார் வங்கியொன்றின் உத்தியோகத்தர், பொறியியலாளர் மற்றும் வர்த்தகர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதுபான விருந்து
இந்த நான்கு சந்தேக நபர்களில் ஒருவரின் நண்பர் ஒருவர் வெளிநாடு செல்வதால் அவர் மத்தேகொடவில் ஏற்பாடு செய்திருந்த மதுபான விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட பின்னர் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது பொலிஸார் சோதனையிட முச்சக்கர வண்டியை நிறுத்தியபோது முச்சக்கரவண்டியில் இருந்து இறங்கிய பொறியாளர் என்று கூறப்படும் நபர், பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர்கள் போதையில் இருந்ததை அறிந்துகொண்ட , பொலிஸார் இது தொடர்பில் கவனத்தில் கொள்ளாது முச்சக்கரவண்டியில் காணப்பட்டவர்களின் தேசிய அடையாள அட்டைகளை கேட்டுள்ளனர்.
ஆனால் முச்சக்கரவண்டியில் இருந்த நால்வரும் இதற்கு ஒத்துழைக்காமல் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், முடிந்தால் அடையாள அட்டையை எடுத்துச் செல்லுமாறு பொலிஸாரிடம் சவால் விடுத்ததுடன் அவர்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்தே குறித்த அரச உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.