யாழ் வைத்தியசாலையில் பல மாதம் கோமாவில் இருந்த அரச அதிகாரி; இறுதியில் நேர்ந்த சோகம்
விபத்தில் சிக்கி கோமா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த மடு - கற்கிரந்தகுளம் பகுதியைச் சேர்ந்த பிரதேச செயலர் ஒருவர் நேற்று (31) உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அநுராதபுரம் வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது நடந்து சென்றவர் மீது மோதியுள்ளார்.
இதன்போது நடந்து சென்ற நபர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் உயிரிழந்த குறித்த நபர் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 2 மாதங்கள் சிகிச்சை பெற்று பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு 4 மாதங்கள் கோமா நிலையில் அங்கு சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.