அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் விடுத்த அறிவிப்பு!
அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் இல்லை என அரசாங்கம் இன்று கூறியுயுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவையின் இணை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறுகையில்,
ஒகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதிக்கு நன்கொடையாக அளிக்கும் அமைச்சரவை முடிவு அரச துறையில் ஊதியக் குறைப்புக்கான முயற்சியல்ல என அவர் கூறினார்.
இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.
அனைத்து அமைச்சரவை அமைச்சர்களின் ஒகஸ்ட் மாத சம்பளத்தை நிதிக்கு வழங்க அமைச்சரவை நேற்று முடிவு செய்திருந்தது.
இந்நிலையில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு அரச துறையிலோ அல்லது தனியார் துறையிலோ கூட ஊதியக் குறைப்புக்கான முயற்சியாகும் என்ற தகவலில் உண்மையில்லை என்று அழகப்பெரும கூறினார்.