கோட்டாபயவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான அரசு செலவு! வெளியான பகீர் தகவல்
கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தனது தற்போதைய வெளிநாட்டுப் பயணங்களுக்காக தனது தனிப்பட்ட நிதியின் ஊடாக செலவழித்து வருகின்றார் என அரசாங்க தகவல் திணைக்களம் இன்றைய தினம் (16-08-2022) தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டில் மேற்கொள்ளும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்கப் பணத்தைச் செலவிடுவதில்லை எனவும், அந்தச் செலவுகள் அனைத்தும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட நிதியினால் மேற்கொள்ளப்படும் எனவும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், மாலைத்தீவு மற்றும் சிங்கப்பூரில் சிறிது காலம் தங்கியிருந்து தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளுக்கு சட்டரீதியாக சில சலுகைகள் உண்டு என தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவினங்களுக்காக அரச நிதி செலவிடப்படுவதாக சில ஊடகங்கள் ஊடாக செய்தி வெளியிட்டிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வெளிநாட்டு செலவுகள் குறித்து சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என தெரிவித்ததோடு, அனைத்து செலவுகளுக்கும் தனது தனிப்பட்ட நிதியே செலவிடப்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.