கோட்டாபயவை எங்கும் செல்ல அனுமதிக்க முடியாது!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அமெரிக்காவுக்குச் செல்ல அனுமதிக்க முடியாது என முன்னாள் அமெரிக்கத் தூதுவர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அமெரிக்க அரசாங்கத்துடன் இணக்கமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கோட்டாபய ராஜபக்ஷ தனது குடியுரிமையை விலக்கிக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் விசா நிராகரிக்கப்பட்டதாக அமெரிக்க தூதரகமே ஊடகங்களுக்கு வெளியிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு கடுமையான வழக்குகள் இருப்பதாகக் கூறும் அவர், ராஜபக்ச ஆட்சியை விட விக்ரமசிங்கே ஆட்சியை அமெரிக்கா விரும்புவதாகக் கூறுகிறார்.