வாகன உதிரிபாகமாக மாறிய தங்கம்...விசித்திர முறையில் கடத்தல்
இலங்கை சுங்க அதிகாரிகள் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவானது இன்று பாரிய அளவிலான தங்க கடத்தல் மோசடி ஒன்றை கண்டுபிடித்தனர்.
இந்த பாரிய தங்க கடத்தல் ஒரு போலியான வர்த்தக பெயரில் விமான சரக்கு பகுதியில் கொரியர் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் நகரத்திலிருந்து வாகனம் மற்றும் மின் விசிறி உதிரிபாகம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அந்த பொருட்களின் உட்புறத்தில் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட பாகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தங்கத்தின் சந்தை மதிப்பு சுமார் 220 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்டவிரோத இறக்குமதி தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.