இலங்கை மக்களுக்கு க்ஷாக் கொடுக்கும் தங்கம் விலை!
இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்று (08) தங்கம் பவுண் ஒன்றிற்கு 4000 ரூபாயால் அதிகரித்துள்ளமை நகைப் பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை (06) 289,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, இன்று 293,000 ரூபாயாக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இன்றைய (08) தங்க விலை
அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (08) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 293,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 271,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 36,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,875 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.