Go Home Gota; முடிவின்றி 15 ஆவது நாளாக தொடரும் போராட்டம் !
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 15 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு - காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டமானது இன்று 15 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இந்நிலையில் நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலிருந்து கடந்த 19 ஆம் திகதி சிலுவையை சுமந்தபடி கொழும்பு நோக்கி பயணித்த நடிகர் ஜெகான் அப்புஹாமியும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்துடன் இணைந்துகொண்டார்.
முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற தேவாலயமாக நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தில் சிலுவைப் பாதையை ஆரம்பித்து கால் நடையாக கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து அங்கிருந்து பின்னர் காலிமுகத்திடலில் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதிக்கு நேற்று சென்று ஜெஹான் தனது நீதிக்கான போராட்டத்தை நிறைவு செய்திருந்தார்.




