மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி: பிரேத பரிசோதனையில் ஏற்பட்ட திருப்பம்!
மட்டக்களப்பு அரசடி பொற்கொல்லர் வீதியில் வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் (28) சடலமாக மீட்கப்பட்ட சிறுமி மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08 கல்வி பயிலும் 13 வயது சிறுமி என பொலிஸார் தகவல் வெளியிட்டனர்.
மேலும் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை பல்வேறு கோணங்களில் பொலிஸார் மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் பெற்றோர்கள் வெளியில் சென்ற வேளையில் வீட்டில் சகோதரிகள் இருவரும் இருந்ததாகவும், அக்கா குளியலறையிலிருந்து வந்தபோது நிகழ்நிலையூடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த தங்கை உயிரிழந்த நிலையிலிருந்தாக பொலிஸாரிடம் உயிரிழந்த சிறுமியின் அக்கா தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து உயிரிழந்த சிறுமியின் சகோதரி மற்றும் அவர்கள் வீட்டுக்கு வரும் இளைஞனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதன்போது உயிரிழந்த சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தபோது மரணத்திற்கான காரணம் எதுவும் கண்டறியப்படாத நிலையில் சிறுமியின் உடற்கூறுகள் பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் உடல் இறுதி நல்லடத்திற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.