ஆண் ஒருவரின் சடலத்தை இழுத்துச் சென்ற இராட்சத முதலை! கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்
தியவன்ன ஓயாவில் மனித சடலத்தை முதலை ஒன்று இழுத்துச் செல்லும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் சிறி ஜெயவர்த்தனபுர கோட்டையில் உள்ள கிம்புலாவலவில் உள்ள தியவன்ன ஓயாவில் இடம்பெற்றுள்ளது.
இராட்ச முதலை ஒன்று ஆண் ஒருவரின் சடலத்தை வாயில் கடித்து இழுத்துக் கொண்டு மிதந்து வந்ததை அவனித்த பொது மக்கள் பொலிஸாருக்கும் விரைந்து தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த முதலை மனித சடலத்துடன் நேற்று மாலை 5.45 மணியளவில் நாடாளுமன்றப் பகுதியிலிருந்து கிம்புலாவல பாலத்திற்கு வந்துள்ளது.
பின்னர் சடலத்தை பாலத்திற்கு கீழே முதலை விட்டுச்சென்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சடலம் மீட்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர் தொடர்பான அடையாளம் இதுவரை காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.