ஜெர்மனியில் சூப்பர் மார்கொட்டில் பதைபதைக்கும் சம்பவம்: இருவர் சுட்டு தற்கொலை
ஜெர்மனியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி நாட்டின் ஸ்விட்ச் இடர் மாவட்டம் த்ரேசா நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது.
இந்த சூப்பர் மார்க்கெட்டிற்குள் நேற்று மதியம் 1 மணியளவில் துப்பாக்கியுடன் நுழைந்த 58 வயதான நபர் அங்கிருந்த 53 வயதான பெண்ணை சூட்டுள்ளார்.
மேலும் குறித்த துப்பாக்கிச்சூட்டில் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்துள்ளார்.
பின்னர் தான் வைத்திருந்த அதே துப்பாக்கியால் அந்த நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.