உடலில் 30க்கும் மேற்பட்ட காயங்கள் ; ஜேர்மனி பெண்ணுக்கு தொல்பொருள் திணைக்கள ஊழியர் செய்த செயல், நீதிமன்றில் அதிரடி

Anuradhapura Sri Lanka Magistrate Court Sri Lanka Police Investigation Crime
By Viro Mar 19, 2026 01:24 AM GMT
Viro

Viro

Report

அநுராதபுரம், மிஹிந்தலை ரஜமஹா விகாரையைப் பார்வையிடச் சென்ற ஜெர்மன் நாட்டு இளம் யுவதியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தொல்பொருள் திணைக்கள ஊழியரை, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்போது, ஜெர்மன் நாட்டு யுவதியின் உடலில் 30-க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

உடலில் 30க்கும் மேற்பட்ட காயங்கள் ; ஜேர்மனி பெண்ணுக்கு தொல்பொருள் திணைக்கள ஊழியர் செய்த செயல், நீதிமன்றில் அதிரடி | German Woman With Over 30 Injuries On Her Body

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்பதும், அவர் மிஹிந்தலை தொல்பொருள் திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சுற்றுலாப் பயணமாக இலங்கை வந்துள்ள குறித்த ஜெர்மன் நாட்டு யுவதி, அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளிலுள்ள புனித தலங்களைப் பார்வையிடுவதற்காகச் சென்றுள்ளார்.

புதன்கிழமைகளில் விடுமுறை வழங்காமல் இப்படி செய்யலாம் ; விடுக்கப்பட்ட கோரிக்கை

புதன்கிழமைகளில் விடுமுறை வழங்காமல் இப்படி செய்யலாம் ; விடுக்கப்பட்ட கோரிக்கை

மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் 'கந்தக சைத்திய' பகுதிக்குச் செல்லும் வழியில் அமர்ந்து அவர் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த வேளையில், சந்தேகநபர் எதிர்பாராத விதமாகப் அவரைப் பலவந்தமாகப் பிடித்துத் துன்புறுத்தியுள்ளார்.

அச்சமயம் விகாரைக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் அங்கிருந்த சிவில் பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயற்பட்டு சந்தேகநபரைத் தப்பவிடாமல் பிடித்தனர். பாதிக்கப்பட்ட யுவதியைக் காப்பாற்றிய அவர்கள், சந்தேகநபரை மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஈரானின் ஏவுகணை தளம் மீது பாய்ந்த பங்கர் - பஸ்டர் குண்டுகள் ; அமெரிக்கா தாக்குதல்

ஈரானின் ஏவுகணை தளம் மீது பாய்ந்த பங்கர் - பஸ்டர் குண்டுகள் ; அமெரிக்கா தாக்குதல்

பாதிக்கப்பட்ட யுவதியும் சந்தேகநபரும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது, ஜெர்மன் நாட்டு யுவதியின் உடலில் 30-க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அத்துடன், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட சந்தேகநபர் அந்தச் சமயத்தில் கேரள கஞ்சா போதையில் இருந்தமையும் மருத்துவ அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US