யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவம்... பொலிஸாரின் பரபரப்பு தகவல்!
யாழ். வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றையதினம் (01-04-2024) இரவு வரமராட்சி - தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றிரவு வாள்களுடன் சென்ற குழுவொன்று பருத்தித்துறை வட்டுவன் பகுதியில் உள்ள நபரொருவர் மீது வாளால் வெட்டுள்ளனர்.
இதேவேளை, வாளால் வெட்டியபோது கீழே வீழ்ந்த கை துண்டையும் ஏடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் வடமராட்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.