சற்றுமுன்னர் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச்சூடு! ஒருவருக்கு நேர்ந்த நிலை
கம்பஹா பகுதியில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம், தம்மிட்ட பிரதேசத்தில் இன்றிரவு (06-08-2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை குறிவைத்து மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 29 வயதுடைய நபர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் துப்பாக்கிச்சூட்டில் இலக்கானவர் உடுகம்பொல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.