கஜேந்திரகுமார் எம்.பி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கஜேந்திரகுமார் எம்.பி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
காவல்துறை அதிகாரி ஒருவர், தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளதாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில், நேற்று மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றபோது, இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருந்தார்.
அதேவேளை யாழில் கஜேந்திரகுமார் எம்.பி குறிவைக்கப்பட்டமை குறித்து சிறிதரன் எம்பி உள்ளிட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.