இலங்கைக்கு வரவிருக்கும் எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
இலங்கைக்கு டீசல் கப்பல்கள் மூன்றும், பெற்றோல் கப்பல் ஒன்றும் எதிர்வரும் நாட்களில் வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளதார்.
இதன்படி, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் ஒரு கப்பலும், 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் ஒரு கப்பலும் இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
மேலும், எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் பெட்ரோல் கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அதே தினத்தில் டீசல் கப்பல் ஒன்றும் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.