எரிபொருள் கப்பல் இன்று வருகை
எரிபொருள் தாங்கிய மூன்று கப்பல்கள் இன்று (15) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 40 000 மெட்ரிக் தொன் டீலுடனான இரண்டு கப்பல்களும் 40 000 மெட்ரிக் தொன் பெட்ரோல் அடங்கிய கப்பல் ஒன்றும் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இன்று முதல் வெள்ளிக்கிழமைகளில் மீண்டும் சுகாதார சேவையாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
இதற்கமைய மோட்டார் சைக்கள்களுக்கு 6 லீட்டரும் முச்சக்கர வண்டிகளுக்கு 8 லீட்டரும் மோட்டார் வாகனங்களுக்கு 20 லீட்டரும் விநியோகிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் சுகாதார பணிக்குலாமினருக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதோடு கடந்த இரண்டு வாரங்கள் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் வழங்குதல் தொடர்பாக முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ள]து.
இலங்கை சட்டதரணிகள் சங்கம் உள்ளிட்ட சிலரால் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.