அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை; சினோபெக் விலையில் மாற்றமில்லை
நாட்டில் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் மற்றும் லங்கன் இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளன.
சினோபெக் எரிபொருள்
அதேவேளை , நேற்று இலங்கையில் புதிய செயற்பாடுகளை ஆரம்பித்த சினோபெக் நிறுவனம், எரிபொருள் விலையை திருத்துவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சினோபெக் நிறுவனம் கடந்த 30ஆம் திகதி தனது செயற்பாடுகளை இலங்கையில் ஆரம்பித்தது.
இந்நிலையில் ட , சிபெட்கோ மற்றும் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விலையை விட 03 ரூபா குறைவாக சினோபெக் எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஊடாக எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.