முகநூல் ஊடாக 450 லட்சம் ரூபாய் மோசடி; பெண் தொடர்பில் பகீர் தகவல்!
சமூக ஊடகங்களில் ஒன்றான முகநூல் மூலம் கவர்ச்சிகரமான வட்டி தருவதாக விளம்பரம் செய்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை ஏமாற்றி, சுமார் 450 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை கைது செய்து சந்தேக நபர் , ஹட்டன் நீதவான் முன் ஆஜர்படுத்திய பின்னர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் பதுளை கண்தேகெதர பகுதியைச் சேர்ந்த திலினி ஷாமீன் சோக்மன் (31) என்ற மூன்று குழந்தைகளின் தாயாகும். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
450 லட்சம் ரூபாய் மோசடி
சந்தேக நபர் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் இதேபோல் 5 லட்சம் ரூபாய் பெற்று, அந்த பணத்திற்கு வட்டியோ அல்லது வாங்கிய பணத்தையோ திருப்பித் தராதது தொடர்பாக , பணம் கொடுத்த பெண் ஹட்டன் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம், பெண்ணை ஹட்டன் காவல் துறையினர் கைது செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கடுமையான பிணை நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டார்.
சந்தேக நபர் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் காவல் நிலைய குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். ஆனால், அவர் கையெழுத்திடாமல் ஐந்து மாதங்களாக ஏமாற்றியதால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து பதுங்கியிருந்த அந்த சந்தேக நபர், தனது தோழியைச் சந்திக்க ரயில் மூலம் , 09ம் திகதி மாலை ஹட்டன் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏமாற்றி பணம்
ஹட்டன், கம்பொல, வெலிகட, வெல்லவாய, தம்புள்ளை, கண்டி, புத்தல உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் இதேபோல் ஏமாற்றி பணம் பெற்றதாகவும், பணம் கொடுத்தவர்கள் தொலைபேசி மூலம் ஹட்டன் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
சந்தேக நபர் பல்வேறு நபர்களிடமிருந்து பெற்ற பணத்திற்கு நம்பிக்கையை உறுதி செய்வதற்காக சில மாதங்கள் உறுதியளித்த வட்டியையும் செலுத்தியுள்ளார்.
மேலும், இவ்வாறு மோசடி செய்த பணத்தை வைத்து நகை வியாபாரம் செய்வதற்காக சந்தேக நபர் இந்தியா சென்றதாக அவர் ஒப்புக்கொண்டதாகவும் ஹட்டன் பொலிஸார் கூறியுள்ளனர்.