பிரான்ஸில் இலங்கையருக்கு நேர்ந்த பரிதாப நிலை!
பிரான்ஸில் வாழ்ந்து வரும் இலங்கையர் ஒருவர் மொழி பிரச்சினையால் தனது மாதாந்த உதவித் தொகையை இழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்காக வழங்கப்படும் உதவித் தொகையை அந்நாட்டில் வாழும் இலங்கையர் ஒருவர் இழந்துள்ளார்.
பாரிஸில் வாழும் இந்த இலங்கையர் குடும்ப உதவி நிதி எனப்படும் உதவித் தொகையை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது கணக்குகள் சிலவற்றை புகுப்பிக்குமாறு பிரான்ஸ் அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் அவரால் அந்த மொழியை புறிந்துக் கொள்ள முடியவில்லை.
அத்துடன் அவரது குடியிருப்பு அனுமதியும் புதுப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவரது குடியிருப்பு அனுமதி பெப்ரவரி மாதம் புதுப்பிக்கப்பட்ட போதிலும் அவர் அதனை சமர்ப்பிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
அவருக்கு பிரெஞ்சு மொழி தெரியாதென்பதனால், அவரது ஆவணங்களில், அவரிடமிருந்து கோரப்பட்ட தொகைகளை அவர் செலுத்த தவறியுள்ளார்.
இந்த நிலையில் அது தொடர்பான அதிகாரிகளிடம் ஆவணங்கள் எடுத்த செல்லப்பட்டுள்ளது. அவர் தனது நண்பருடன் அங்கு சென்று விடயங்களை தெளிவுப்படுத்த முயற்சித்துள்ளார்.
இருப்பினும், கட்டணம் செலுத்த வேண்டிய திகதி மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய திகதிகள் உரிய முறையில் இல்லாமையினால் அவர் இனிமேல் அந்த உதவித் தொகையை பெற முடியாதென அதிகாரி தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் பல முறை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு விடயத்தை புரிய வைக்க முயன்ற போதிலும் மொழி அறிவு தடையாகியுள்ளது.
கடிதம் மூலம் தன் நிலைமையை புரிக்க வைத்து மேல் முறையீடு செய்து அந்த பணத்தை பெறுவதற்கு இலங்கையர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
குறித்த இலங்கையர் போன்று பலர் உதவிகளை பெற முடியாத வகையில் சிக்கிக் கொள்வதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய அவ்வாறான நபர்களுக்காக மொழி பெயர்ப்பு நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்கு பிரான்ஸ் அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளர்.