பாடசாலை மாணவி கடத்தல்; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; காதல் உறவு காரணமாம்!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிவிட்டு வீடு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த 16 வயது மாணவி ஒருரை கடத்திச் செல்ல முயன்ற நான்கு சந்தேக நபர்கள் அலதெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியை கடத்திச் செல்ல முயற்சிப்பதாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து உடனையாக செயல்பட்ட பொலிஸார் வேனுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மாணவியுடன் காதல் உறவு
சந்தேக நபர்களில் ஒருவர் முன்னாள் இராணுவ சிப்பாயொருவர் என்பதுடன் அவர் இந்த மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் சகோதரர் இராணுவ சிப்பாயாகக் கடமையாற்றுபவர் என்பதுடன் சந்தேக நபரான முன்னாள் இராணுவ சிப்பாய் ,சிறுமியின் வீட்டிற்கு பல முறை சென்றபோது இருவரும் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை சந்தேக நபர் ஏற்கனமே திருமணம் முடித்தவர் எனச் சிறுமிக்குத் தெரியவந்ததையடுத்து சிறுமி அவரைத் தவிரித்து வந்துள்ள நிலையில் சிறுமியின் பெற்றோர் சிறுமியைக் குலுகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்க வைத்துள்ளனர்.
இதனையடுத்து முன்னாள் இராணுவ சிப்பாய் தனது நண்பர்களுடன் இணைந்து வேன் ஒன்றை வாடகைக்கு எடுத்து சிறுமியைக் கடத்திச் செல்ல முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை அலதெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.