வைத்தியசாலையில் மேஜர் பேயாட்டம்
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அநாகரீகமாக நடந்துகொண்ட முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் இன்று (18) நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய மேஜர் விடுமுறைக்காக நுவரெலியா பகுதிக்கு வந்து, குடி போதையில் விழுந்து கிடந்த நிலையில் காயமடைந்துள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
அரை நிர்வாணமாக, அநாகரீகமான முறையில் தகாத வார்த்தை
இதன் போது வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தன்னை அவமரியாதையாக பேசினார் என கூறிய மேஜர் , அரை நிர்வாணமாக, அநாகரீகமான முறையில் நடந்துக்கொண்டு வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளரால் நுவரெலியா பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டுக்கமைய , சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.