தாமரை கோபுரத்திலிருந்து குதித்த வெளிநாட்டவர்; பொலிஸார் அதிரடி நடவடிக்கை
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த அமெரிக்க பிரஜை ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான வெளிநாட்டவரிடம் நடத்திய விசாரணையில், தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட் ஜம்பிங் போட்டிக்காக வந்ததாகக் கூறியுள்ளார்.
இருப்பினும், பாராசூட் ஜம்பிங் போட்டிக்காக அனுமதி ரத்து செய்யப்பட்டதாகவும், அது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தாமரை கோபுரத்திலிருந்து குதித்து பாதுகாப்பாக தரையிறங்கிய பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர், பாராசூட்டின் உதவியுடன் உயரமான இடங்களிலிருந்து குதிப்பது தனது பொழுதுபோக்காக இருப்பதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
.