பிரித்தானியாவில் பெற்றோலுக்காக 7 மணித்தியாலம் காத்திருந்த பிரபல கால்பந்து வீரர்!
பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தில் உள்ள நிலையில் உலகின் பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) பெற்றோலுக்காக எரிபொருள் நிலையத்தில் 7 மணிநேரம் காத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் எரிபொருள் நிரப்ப சொகுசு காரான பென்ட்லியை (Bentley) சாரதி செலுத்திச் சென்றார். அந்த காருக்கு பின்னால் வந்த பாதுகாப்பு வாகனங்களும் பெற்றோல் போடுவதற்காக வந்து நின்றுள்ளது.
எனினும் எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் இல்லை என அங்கிருந்த ஊழியர்கள் கூறியுள்ளார்கள். அப்போது தான் அந்த கார் உலகின் பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கார் என்பது தெரியவந்தது.
எனினும் பெற்றோல் இல்லை என ஊழியர்கள் தெரிவித்ததை அடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (Cristiano Ronaldo) கார் 7 மணி நேரமாக குறித்த எரிபொருள் நிலையத்தில் காத்திருந்தும் எரிபொருள் நிரப்ப முடியாமல் திரும்பிப் சென்றுள்ளது.
மேலும் கோடி கோடியாகப் பணம் இருந்தும் கிறிஸ்டியானோ ரொனால்டோவால் (Cristiano Ronaldo) எரிபொருள் நிரப்ப முடியாமல் 7 மணி நேரம் எரிபொருள் நிலையத்தில் காத்திருந்து திரும்பிச் சென்ற சம்பவம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.