கணவன், மனைவி பரிவர்த்தனை சங்கம்' நடத்திய விமானப்படை சிப்பாய் சிக்கினார்
முகநூல் பக்கத்தில் பெண்களின் புகைப்படங்களை தவறான குறிப்புகளை இடப்பட்டு 'கணவன், மனைவி பரிவர்த்தனை சங்கம்' நடத்தி வந்த 25 வயது விமானப்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகநூல் பக்கத்தில் ஏராளமாக பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு, அதற்கு ஆபாசமான குறிப்புக்கள் இடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்ததை தொடர்ந்து, களுத்துறை பிரதேச சிறப்பு குற்றப்பிரிவு அவரை கைது செய்துள்ளனர்.
இந்த குற்றத்திற்காக அந்த 25 வயது நபர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை பொலிசார் தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் அந்த நபரிடமிருந்து பெண்களை இரகசியமாக புகைப்படம் எடுக்க அவர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து இம் மாதம் 19ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.