உயிரோடு இருக்கும்போதே ரஷ்யாவுக்கு ஓடிவிடுங்கள்: பகீரங்க எச்சரிக்கை விடுத்த உக்ரைன்
உக்ரைன் மீது ரஷ்யா 31 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வருகின்றது. மேலும் இந்த தாக்குதலுக்கு ஈடுகொடுத்து உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் இருக்கிற ரஷிய துருப்புகளை உயிரோடு ரஷ்யாவுக்கு ஓடிவிடுமாறு உக்ரைன் படை வீரர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுபற்றி உக்ரைன் படை வீரர் ஒருவர், “ஓடுங்கள். ஓடி விடுங்கள். குழந்தைகளை கொல்லாதீர்கள். வீடுகளை, குடும்பங்களை அழிக்காதீர்கள். உயிரோடு இருக்கும்போதே உங்கள் நாட்டுக்கு ஓடி விடுங்கள்” என கூறியதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
உக்ரைன் போரில் ரஷ்யா 1 லட்சத்து 90 ஆயிரம் படைவீரர்களை களமிறக்கி உள்ளது. அவர்களில் 15 ஆயிரம் படைவீரர்களை வரையில் இந்தப் போரில் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு கூறுகிறது.