லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடம்பர வாகனங்கள் சிக்கியது
நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பல சொகுசு கார்கள் ஒருகொடவத்தை சுங்கப் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Mercedes Benz Maybach, Audi A1, Fiat car ஆகிய 5 கார்களே சுங்க பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த வாகனங்கள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் இருந்து மோட்டார் உதிரிபாகங்களாக இலங்கைக்கு இந்த வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.