கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளான மீன்பிடி படகு... காணாமல்போன மூவர்!
நடுக்கடலில் கப்பலுடன் மீன்பிடி படகு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று மீனவர்களைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கடற்பகுதியில் சுமார் 270 கிலோமீற்றர் தொலைவில் நேற்றையதினம் (03-09-2024) அதிகாலை 7 மீனவர்களுடன் பயணித்த மீன்பிடி படகு ஒன்றே இவ்வாறு கப்பல் ஒன்றுடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
குறித்த சம்பவத்தில் 28, 43 மற்றும் 52 வயதுடைய அஹுகல்ல, கொஸ்கொட பகுதிகளைச் சேர்ந்தவர்களே காணாமல்போனதாக தெரிவிக்கப்படுகிறது.
மீனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட மீனவர்களை கரைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக பொலிஸார் மற்றும் கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.