இலங்கை வரலாற்றில் முதன் முறை: வெளிவந்துள்ள முக்கிய பட்டியல்
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நாடாளுமன்றத்தில் முக்கிய நிறுவனங்களின் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பட்டியல் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் (Ranjith Siyambalapitiya) இன்றைய தினம் (17-11-2022) இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உட்பட 420 அரசு நிறுவனங்கள் பட்டியலுக்குள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை திங்கட்கிழமை (14-11-2022) சமர்ப்பித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வாக்குறுதியின் பிரகாரம் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பட்டியல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கீழ் 1283 நிறுவனங்கள் உள்ளதாகவும், அவற்றில் 29 அமைச்சகங்கள் மற்றும் 99 அரசு துறைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குள் 25 மாவட்ட செயலகங்கள், 09 மாகாண சபைகள், 341 பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் 341 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளதாக நிதி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.