காகித தொழிற்சாலையில் தீ விபத்து ; தீவிரமாகும் விசாரணை
எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையில் கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் 3.20 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ பரவுவதைத் தடுப்பதற்காகக் காகித தொழிற்சாலையின் தீயணைப்புப் பிரிவு, இராணுவத்தினர், பொலிஸார், எம்பிலிபிட்டிய நகர சபை மற்றும் செவனகல சர்க்கரை ஆலையின் தீயணைப்புப் பிரிவு ஆகியவை இணைந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீ தற்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
காகித தொழிற்சாலைக்குக் கொண்டு வரப்பட்ட கழிவுப் பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்த பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.