வீதியில் மோட்டார் சைக்கிளில் வித்தை காட்டிய இளைஞனுக்கு நேர்ந்த கதி!
மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்தை உயர்த்தி ஒரு சக்கரத்தில் வீதியில் சாகசப் பயணம் செய்த இளைஞனுக்கு குளியாப்பிட்டி நீதவான் ரண்டிக லக்மால் ஜெயலத் ரூபா 55,000 அபராதம் விதித்து கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
இளைஞனுக்கு எதிராக பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருத்தல், இலக்கத்தகடுகள் மற்றும் பக்கக் கண்ணாடிகள் சரியாக பொருத்தப்படாமல் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
மோட்டார் சைக்கிளை ஒரே சக்கரத்தில் ஓட்டி, பெரும் சத்தம்
குளியாப்பிட்டி கனதுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரான தசுன் ஷெவந்தா என்ற இளைஞன் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
சந்தேகநபர் தனது மோட்டார் சைக்கிளை ஒரே சக்கரத்தில் ஓட்டி, பெரும் சத்தத்தை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக குளியாப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதம பரிசோதகர் கமல் ரத்நாயக்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வகையில் ஒரு சக்கரத்தில் சவாரி செய்வது பாதசாரிகள் மற்றும் சவாரி செய்பவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் கூறினார்.
இதேபோன்ற குற்றங்களில் ஈடுபடும் மற்ற இளைஞர்களுக்கு ஒரு செய்தியாக இருக்கும் வகையில் தண்டனை விதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்ட நிலையில், நீதிமன்றம் இளைஞனுக்கு அபராதம் வித்துள்ளது.