பிடித்த பாடலை ஒலிபரப்பவில்லை; மணமேடைக்கு செல்லாது அடம்படித்த மணப்பெண்! வைரல் காணொளி
திருமண மண்டபத்துக்குள் தான் முதன்முதலாக நடந்துவரும்போது பின்னணியில் ஒலிக்கவிடுவதற்கு ஏற்கனவே தயார்படுத்திக்கொடுத்த பாட்டை தக்க தருணத்தில் ஒலிக்க விடவில்லை மணப்பெண் அடம்பிடித்த சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த பாடலை ஒலிபரப்பாவிட்டால் மண்டபத்துக்குள் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும் மணப்பெண்ணின் வைரல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
அலங்காரத்தோடு வந்து நின்று அடம்படித்த இந்த மணப்பெண்ணின் கோரிக்கையை ஏற்று, கூட நின்றவர்கள் ஓடிப்போய் குறிப்பிட்ட பாட்டை இசைக்கவிட்ட பிறகுதான் அம்மணியின் முகத்தில் சிரிப்பு வந்ததை அடுத்தே மாப்பிள்ளைக்கு கொஞ்சம் மூச்சு வந்தது.
இந்நிலையில் குறித்த காணொளி தற்பொழுது வைரலாகியுள்ளது.