மகனின் போதையால் பார்வையை இழந்து பரிதவிக்கும் தந்தை! விடுத்த கோரிக்கை

incident Valaichenai drugs addicted
By Sulokshi Sep 25, 2021 12:00 PM GMT
Sulokshi

Sulokshi

Report

வாழைச்சேனையில் போதைப்பொருள்‌ பாவனைக்கு அடிமையான தனது மகனை திருத்தி, சமூகத்தில் நல்ல பிரஜையாக்க முயன்ற பொறுப்பான தந்தையொருவருக்கு மகனால் பார்வை பறிபோன துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துயரமான சம்பவம் கடந்த18ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பாடசாலை வீதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த தந்தை தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவத்தில் 67 வயதான சத்ஹத்துல்லா ஹசனார் என்ற முதியவரே பாதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கூறிய அவர்,

எனது மகனின் போதைப்பொருள் பாவனையை நிறுத்த தொடர்ந்தும் முயற்சித்து வந்தேன். 4 வருடங்களாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். போதைப்பொருள்‌ பாவிக்க வேண்டாம்‌. கெட்ட நண்பர்களுடன்‌ சேர வேண்டாம்‌ என்று புத்‌திமதி சொன்னதாலேயே தனக்கு இந்நிலை ஏற்பட்டதாகவும் அவர் கண்ணீர் வடிக்கின்றார்.

எனது மகனுக்கு தற்போது 19 வயது, அவன்‌ 2017ஆம்‌ ஆண்டில்‌ இருந்தே போதைக்கு அடிமையாகி விட்ட நிலையில், அவனை திருத்த பல முயற்சிகள் எடுத்து வருகிறேன்.

அத்துடன் எனது மகன் போதைப்பொருள் பாவிப்பதால், நான் பள்ளிவாசலில் செய்ய வேலையையும் விட்டு விட்டேன்.  மகனைத்‌ திருத்த வேண்டும் என்பதற்காக, 2017ஆம்‌ ஆண்டு முதல்‌ இதுவரை ஐந்து தடவைகள்‌ வாழைச்சேனை பொலிஸ்‌ நிலையத்தில்‌ முறைப்பாடு செய்தபோதும் அது பலனளிக்கவில்லை. அவனது நண்பர்களிடமும்‌ நான் கெஞ்சியபோதும், அதில் யாரும் திருந்தவில்லை என்பதுடன் எனது மகனை விட்டு அவர்கள்‌ விலகவுமில்லை.

சம்பவம்‌ இடம்பெற்ற அன்று, மகன்‌ என்னிடம்‌ ஆயிரம்‌ ரூபாய்‌ பணம்‌ கேட்டபோது அதனை நான் கொடுக்க மருத்ததால் எனது தலையில்‌ கல்லால்‌ கடுமையாக தாக்கி ‌ எனது கழுத்தை நெரித்து, கொலை. செய்ய முயற்சித்தான்‌. இந்நிலையில் அவனுடன் கடுமையாக போராடித்தான் அவனது பிடியிலிருந்து விடுபட்டு, உயிரைக் காப்பாற்றிக் கொண்டேன். எனினும் ‌, எனது கண்ணைஅவன் தோண்டி எடுத்துவிட்டான்‌. 

 இப்போது எனது   இடது கண்‌ முழுமையாக எடுக்கப்பட்டு விட்ட நிலையில் வலது கண்ணும்‌ 80 சதவீதம்‌ பாதிப்படைத்துள்ளதாக வைத்தியர்கள்‌ சொல்லியுள்ளனர். எனினும் ‌, நான்‌ கவலைப்படவில்லை. தைரியமாக இருக்கிறேன்‌. எனது மகனை நான்‌ ஜெயிலுக்கு அனுப்பவில்லை. அவர்‌ செய்த வேலையால்தான்‌ அவர்‌ இப்போது சிறையில்‌ இருக்கிறார் என்றார் ‌.

எனக்கு நடந்த இந்தச்‌ சம்பவம்‌ போல, இனி யாருக்கும்‌ நடக்கக்‌ கூடாது என கல்லங்கும் அந்த தந்தை, பிள்ளைகள்‌ எங்கு செல்கிறார்கள்‌, யாருடன் பழகுகிறார்கள்‌ என்பதை பெற்றோர்கள்‌ அறிந்திருப்பதுடன், ஒவ்வொரு, பெற்றோர்களும்‌ பிள்ளைகள்‌ விடயத்தில்‌ விழிப்புடன்‌ இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்‌.

நாட்டில் இப்போது, போதைப்பொருள்‌ பாவனையும்‌ விற்பனையும்‌ அதிகரித்து விட்டதனால் இளம்பிள்ளைகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல குடும்பங்களில் நிம்மதியில்லாமல் போய் விட்டதாக கூறிய அவர், தனக்கு நடந்ததுபோல் வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் போதைபழக்கத்தில் இருந்து நம் இளைய சமூகத்தை பாதுக்காக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அந்த தந்தை கேட்டுக்கொண்டார்.   


GalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US