இலங்கையில் துயரச் சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த தந்தை - மகள்!
வாரியபொலவில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
வாரியபொல, மாதம்பே பிரதேசத்திலேயே இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் பின்னால் பயணித்தவரும் படுகாயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் 4 வயது தந்தையும், 16 வயது மகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் பின்னர் லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.