யாழில் வெளிநாட்டு சிகரெட்டுக்களை வைத்திருந்த நபருக்கு நேர்ந்த கதி
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By Yadu
இளவாலை பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுக்களை வைத்திருந்த 33 வயதுடைய ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் அம்மன் கோவில் பகுதியில் வைத்து நேற்றையதினம் (06) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன்போது அவரிடமிருந்து 28 சிகரெட் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US