பிரபல நாட்டின் பெண் பிரதமர் பதவியேற்ற சில மணிநேரங்களிலே இராஜினாமா!
சுவீடனின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற மாக்டலேனா ஆண்டர்சன் (Magdalena Andersson), பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
54 வயதான ஆண்டர்சன் (Magdalena Andersson), புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு 12 மணி நேரத்திற்கும் குறைவான காலப் பகுதியில் மாத்திரம் சுவீடன் நாட்டின் பிரதமராக இருந்தார். இது குறித்து ஆண்டர்சன் (Magdalena Andersson) செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,
பிரதமர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு சபாநாயகரிடம் தாம் கேட்டுக் கொண்டதாக கூறினார். அத்துடன் தனிக்கட்சி அரசாங்கத்தின் தலைவராக மீண்டும் பிரதமராக முயற்சிப்பேன் என்றும் அவர் பாராளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்ததாக ஆண்டர்சன் (Magdalena Andersson) சுட்டிக்காட்டினார்.
இதேவேளை சுவீடனின் முதல் பெண் பிரதம மந்திரியாக மக்டலேனா ஆண்டர்சன் (Magdalena Andersson) புதன்கிழமை பதவியேற்றார். மக்டலினா ஆண்டர்சனுக்கு (Magdalena Andersson) முன்னதாக 33 பேர் சுவீடனின் பிரதமர் பதவியில் இருந்துள்ளார்.
மக்டலினா ஆண்டர்சனில் (Magdalena Andersson) கொண்டுவரப்பட்ட வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றில் நிறைவேறத் தவறியதனாலும், அவரது கூட்டணிக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகியதனாலும் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார்.
மேலும் மக்டலினா ஆண்டர்சனின் (Magdalena Andersson) வரவுசெலவுத் திட்டத்திற்கு பதிலாக எதிர்க்கட்சிகளால் வரையப்பட்ட வரவு-செலவுத் திட்டத்திற்கு பாராளுமன்றம் வாக்களித்ததாகவும் கூறப்படுகின்றது.