யாழில் பிரபல போதைப்பொருள் வியாபாரி மடக்கிப்பிடிப்பு!
யாழில் பிரபல போதைப்பொருள் வியாபாரி பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். கோப்பாய் - செல்வபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதான நபர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளர்.
பல நாட்களாக தேடப்பட்டுவந்தவர்
குறித்த நபர் பல நாட்களாக தேடப்பட்டுவந்த நிலையில் நேற்று மாலை கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர்.
அதேவேளை கல்வியங்காடு சந்தியில் சுமார் 36 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 1 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைதாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.