கணவன், மகள் வெளிநாட்டில்... யாழில் மரம்மான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்!
யாழ்ப்பாணத்தில் பகுதியொன்றில் வீட்டில் இளம் குடும்பப் பெண் ஒருவர் படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (16-05-2024) தாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியை சேர்ந்த 31 வயதான ஜென்சியா சிவசூரியன் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண்ணின் கணவரும் மகளும் பிரான்ஸில் வசித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் நேற்று முன் தினம் (15-05-2024) உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்ற பெண் அடுத்த நாள் காலை படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பெண்ணின் சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.