கனடாவில் நோயாளி ஒருவரின் தடியை சவரம் செய்ததனால் எழுந்துள்ள சர்ச்சை
கனடாவில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவரின் தாடியை சவரம் செய்ததாக வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தாடியை சவரம் செய்தவர் குடும்பத்தினர் இவ்வாறு வைத்தியசாலை எதிராக குற்றம் சுமத்தியுள்ளனர்.
பிரம்டனைச் சேர்ந்த சீக்கியர் ஒருவருக்கு சிகிச்சை அளித்த போது இவ்வாறு தாடி சவரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்காக வைத்தியசாலை நிர்வாகம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறித்த நபரின் குடும்பம் கோரிக்கை உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 28 அல்லது 29 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜோஹிந்தர் சிங் என்ற நபர் டொரன்டோவின் சென்ட் மைக்கேல் வைத்தியசாலையில் இருந்து பிரம்டன் சிவிக் வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
85 வயதான ஜோஹிந்தர் சிங் கீழே விழுந்து காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தாடை பகுதியில் ஏற்பட்ட முறிவு காரணமாக அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டொரன்டோ வைத்தியசாலை அதிகாரிகள் தாடியை மழிப்பதற்கு கேட்டபோது குடும்பத்தினர் தங்களது மத நம்பிக்கை அடிப்படையில் அதனை நிராகரித்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அதிகாரிகள் தாடியை அழிப்பதற்கு கேட்டதாகவும் அதற்கு முடியாது என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறு எனினும் குறித்த மருத்துவமனை அதிகாரிகள் சிங்கின் தடியை மழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசர நிலைமையாக இருந்திருந்தால் அதற்கு தாங்கள் அனுமதி வழங்கி இருக்கக் கூடும் எனவும் அவ்வாறான அவசர நிலைமை எதுவும் இல்லாத சந்தர்ப்பத்தில் இவ்வாறு தாடி மழிக்கப்பட்டுள்ளதாக ஜோஹிந்தர் சிங்கின் குடும்பத்தினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.