யாழில் பொங்கல் தினத்தில் இடம்பெற்ற பெரும் சோகம்; பரிதாபமாக பலியான குடும்பஸ்தர்
யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் தோட்ட நிலத்தை உழுதும் போது உழவு இயந்திரத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பொங்கல் தினமான இன்று நண்பகல் இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் புத்தூர் - கலைமதி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய சின்னதம்பி தெய்வேந்திரன் என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.