மட்டக்களப்பில் மாயமான குடும்பஸ்தர்; தவிப்பில் மனைவி !
மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில், காணாமல்போனவரின் உறவுகளால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன குடும்பஸ்தர் தொடர்பில் மனைவி நேற்று (8) பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
3 பிள்ளைகளின் தந்தை
சம்பவத்தில் வடமுனை, ஊத்துச்சேனையைச் சேர்ந்த 55 வயதுடைய சிவசுப்பிரமணியம் குருநாதன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே காணாமல் போயுள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி, மட்டக்களப்பு – திரும்பெருந்துறையில் உள்ள வாகனம் திருத்துமிடத்திற்கு தனது முச்சக்கரவண்டியை கொண்டு சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லையென உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன் , அவரது தொலைபேசியின் தொடர்பும் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இவரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேடியும் எதுவித தகவலும் கிடைக்கவில்லையென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காணாமல்போன குடும்பஸ்தர் தொடர்பில் கண்டவர்கள் தகவல் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.