கோட்டாபயவின் உரையைக் கண்டதும் குடும்பஸ்தர் அதிரடி முடிவு!
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக அரசாங்கத்தின் மீது மக்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் நேற்று உரையாற்றியிருந்தார்.
நாட்டில் சுழற்சி முறையில் மின்சார விநியோகம் நடைமுறைப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி உரையாற்றும் போது மட்டும் மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்பட்டது.
நாட்டு மக்களுக்காக நேற்று உரையாற்றிய ஜனாதிபதி, தற்போது நடைபெறும் பாதிப்புகளுக்கு தான் பொறுப்பு இல்லை என்றும், தன்மீது நம்பிக்கை வைத்தால் விரைவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்ததார்.
இதனை கேட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் கடும் கோபமுற்று ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, வீட்டிலுள்ள மின்சாரத்தை ஒருவர் தடை செய்து ஜனாதிபதியின் உரைக்கு தடை விதித்துள்ளார்.
தென்னிலங்கையில் நடந்த இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேசமயம் அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களுக்கு உள்ள அதியுச்ச வெறுப்பின் வெளிப்பாடாக இதனை பார்க்க முடியும் என சமூகவலைத்தளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.